உங்க வீட்டுல மொட்டை மாடி இருந்தா, துணி, வடாம் காயப்போடுறதுக்கு... பழைய தட்டுமுட்டு சாமான்களை போட்டு வைக்கறதுக்கு... அதிகபட்சமா, செல்போன் டவர் கட்ட... இப்படித்தான் பயன்படுத்துவீங்க. ஆனா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான செல்லப்பாவோ... ''நோய், நொடிகளை விரட்டியடிக்கற இடமாத்தான் மொட்டை மாடியை பார்க்கறேன்'' என்று சொல்லி நம்மை நிமிர வைக்கிறார்.
''என்னது மொட்டை மாடியில நோயை விரட்டுறாரா... அடடா ராசிக்கல் பார்ட்டிங்க மாதிரி புதுசா ஒரு ஆள் கிளம்பிட்டாருடோய்''னு ஊரைக் கூட்டிடாதீங்க.
''இருக்கற இடத்துல கத்திரிக்காயோ... முளைக்கீரையோ நம்ம கையால பயிர் பண்ணி சாப்பிட்டா, தேவையில்லா விருந்தாளியான நோயெல்லாம் ஏங்க நம்மகிட்ட வரப்போகுது'' என்று செல்லப்பா சொல்வது முழுவதும் பசுமை வைத்தியம்.
‘‘இந்த வீட்டை 1976-ம் வருஷத்துல கட்டினோம். மொட்டை மாடி உபயோகமில்லாம கிடக்கே என்ன மாதிரி அதைப் பயன்படுத்தலாம்னு ரொம்பவே யோசிச்சோம். அப்பதான் மொட்டை மாடித் தோட்டம்ங்கிறது மனசுக்குள்ள உருவாச்சி. உடனடியா செயல்படுத்திட்டோம்'' என்று சொல்லும் செல்லப்பா, 31 ஆண்டுகளாக இந்த மாடி தோட்டத்தை வெற்றிகரமாக பராமரித்து வருகிறார்!
கோவை, பாகல், கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், முள்ளங்கி, தக்காளி என்று காய் வகைகள்.. அரைக்கீரை, மணத்தக்காளி, பொன்னாங் கன்னி, பாலக், சிலோன் பசலை என்று கீரை வகைகள்... மருதாணி, துளசி, சோத்துக் கற்றாழை என்று மூலிகைச் செடிகள்... ரோஜா, குடைமல்லி என மலர் வகைகள் என்று தோட்டம் முழுக்கவே செழித்துக் கிடக்கின்றன செடி,கொடிகள்.
''செடிகளுக்கு மண்தான் தேவை. அதுக்காக மண் தரையில மட்டும்தான் வளர்க்க முடியும்னு நினைக்கக்கூடாது. எந்த ஒரு காய்கறிச் செடியும் மரமா வளராது. அதிக வேரும் விடாது. அதனால தொட் டியிலயே வளக்கலாம். ஒரு மண் தொட்டி... இல்லனா பழைய கோணிப்பையில 2 மடங்கு மணலையும், ஒரு மடங்கு செம்மண் ணையும், கொஞ்சம் எருவையும் கலந்து செடியையோ அல்லது விதையையோ நட்டு வைக்கணும். தண்ணி வெளியே கசிஞ்சி போறதுக்கு தொட்டியோட அடிப்பாகத்துல சின்னதா ஒரு துளையும் போட்டு வைக்கணும். தண்ணியும் மணல்ல உள்ள காத்தும் கொஞ்சம் கொஞ்சமா வெளியேறி மண்ணுக்கும், செடிக்கும் புத்துயிர் கிடைக்கும். இல்லனா செடி பட்டுப் போயிடும்'' என்று அக்கறையாகச் சொன்ன செல்லப்பா, எப்படியெல்லாம் பார்த்து பார்த்து தோட்டத்தை பராமரிக்க வேண்டும் என்று பட்டியல் போட்டார்.
ஒரு தொட்டியில ஒரே ஒரு கத்திரி செடியைத்தான் நடமுடியும். வெண்டையா இருந்தா ரெண்டு செடியைப் பயிரிட முடியும். வெண்டைச் செடி, ஒன்றரை மாசம் வரைக்கும் காய்க்கும். கத்திரி, மூணு மாசம் வரைக்கும் காய்க்கும். அதுக்குப் பிறகு பட்டுப் போயிடும். தொட்டியில உள்ள மண்ணை எடுத்து வெயிலில் காயப்போட்டுடணும். வேற மண்ணை எடுத்து அந்த தொட்டியில போட்டு மறுபடியும் செடிங்களை நடலாம். காயப்போட்ட மண்ணை எடுத்து வேற ஒரு தொட்டியில போட்டு, அதுலயும் செடியை நடலாம். இப்படி சுழற்சி முறையில் பயன்படுத்தறதால... இங்க எதுவுமே வீணாகறதில்லை.
சிலர், மொட்டை மாடியில ம
வீட்டுக்கருகில் ஒரு வெற்றிடம் குப்பை கூடாரமாக மாறிக் கொண்டிருக்க... அதைப் பார்த்த செல்லப்பா, அந்த இடத்தை சீரமைத்து கீரை, கத்திரி, முள்ளங்கி, வெள்ளரி என்று பயிரிட்டு வருகிறார்.
அதைப்பற்றி, ''சுகாதா ரத்துக்கு சுகாதாரம்... வீட்டுக்கும் காய்கறிகள் கிடைச்ச மாதிரி ஆச்சு'' என்று குஷியோடு சொல்லும் செல்லப்பா,
''இந்த மாடித் தோட்டத்துல கிடைக்கற காய்கறிகள், தேவைக்கு அதிகமாகவே இருக்குது. அக்கம் பக்கத்துல உள்ளவங்க... தெரிஞ்ச நண்பர்கள்னு கொடுக்கறோம். வீட்டுலயே பயிர் செய்றதால... சுத்தமாவும் சுகாதாரமாவும் காய்கள் கிடைக்குது.... அதுவும் இயற்கை முறையில விளைஞ்ச காய்களா கிடைக்குது. அதனால, நோய் நொடி வர்ற வாய்ப்பு ரொம்ப ரொம்ப குறைஞ்சிருக்கு. இதுதான் முக்கியமான விஷயம். தினமும் ஒரு மணி நேரத்தை ஒதுக்கினா போதும். இதனால மனசுக்கும் உடம்புக்கும் புத்துணர்ச்சி கிடைக்குது. அதை விட வேறென்னங்க வேணும் இந்த உலகத்துல!'' என்று கேட்டுவிட்டு,
''விருப்பமுள்ளவங்களுக்கு மாடி தோட்டம் பற்றி சொல்லித் தர நான் தயாராவே இருக்கேன். சென்னையில இருக்கற தோட்டக் கலைத்துறை அலுவலகத்துலயும் போய் கேட்டுக்கலாம்'' என்று வழியையும் காட்டி முடித்தார்.
செல்லப்பாவை தொடர்பு கொள்ள... தொலைபேசி: 044-26280770 அலைபேசி: 94442-44362.
| ||||
உங்க வீட்டுல மொட்டை மாடி இருந்தா, துணி, வடாம் காயப்போடுறதுக்கு... பழைய தட்டுமுட்டு சாமான்களை போட்டு வைக்கறதுக்கு... அதிகபட்சமா, செல்போன் ...
Post a Comment