புரட்சித்தலைவி அம்மா உடனடியாக விடுதலையாக சில வழிகள் !
தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலாம். உடனடியாக மீண்டும் முதல் அமைச்சர் பதவி ஏற்கலாம். இதை சட்ட வல்லுனர்கள் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.
1. ஒரு மாநில முதல் அமைச்சரை கீழமை நீதிமன்ற நீதிபதி சர்வாதிகாரத்தனமாக கைது செய்தது செல்லாது என கவர்னர் அறிவிக்க வேண்டும். இதற்கு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னரிடம் சபாநாயகர் முறையிட வேண்டும். கவர்னர் ஆனையிட்டால் உடனடியாக பெங்களூர் சிறையில் இருந்து செயலலிதா விடுதலையாவார்.

2. ஜெயலலிதா மீதான தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளது. இதற்காக தமிழக சட்டசபை கவர்னருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இதனால் செயலலிதாவுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியும். உடனடியாக செயலலிதா மீண்டும் முதல் அமைச்சராக முடியும்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை கவர்னர் மதிக்காமல் இருப்பது, பயன்படுத்தாமல் இருப்பது தான் இன்னும் விசித்திரமாக உள்ளது. இதை அதிமுக சட்ட வல்லுனர்கள் ஏன் பயன்படுத்த தயங்குகிறார்கள் என்பதும் புரியாத புதிராக உள்ளது.
ஒரு மாநில முதல் அமைச்சருக்கு கீழமை நீதிமன்ற நீதிபதி தண்டனை அறிவிப்பது தவறில்லை. ஆனால் அவரை தண்டிக்கும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை. அதை கவர்னர் தான் செய்ய வேண்டும். இந்த விடயத்தை சட்ட வல்லுனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நன்றி : தமிழ் மலர்
புரட்சித்தலைவி அம்மா உடனடியாக விடுதலையாக சில வழிகள் !
புரட்சித்தலைவி அம்மா உடனடியாக விடுதலையாக சில வழிகள் ! தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போதைய சட்ட சிக்கலில் இருந்து எளிமையாக விடுதலை பெறலா...
Post a Comment