Ads (728x90)

திருப்பதி ஏழுமலையானுக்கு மலர் யாகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நேற்று புஷ்ப யாகம் நடந்தது. அதையொட்டி, சுவாமிக்கு 8 டன் எடையுள்ள சாமந்தி, ரோஜா, சம்பங்கி, மருவம், தவனம் உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் இந்த யாகத்திற்கு பயன்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு நிற மலரைக் கொண்டு அர்ச்சனை செய்யும்போதும், அதற்கேற்ப மந்திரம் முழங்கப்பட்டது. மாலை 5 மணி வரை (சுமார் 4 மணி நேரம்) இந்த புஷ்ப யாகம் நீடித்தது. சுவாமிகளின் பாதத்தில் தொடங்கிய மலர் அர்ச்சனை, கழுத்து வரை மலர்கள் நிறையும் அளவிற்கு நடந்தது.
புயல், மழை, வெள்ளம், பூகம்பம், நிலச்சரிவு, கடல் சீற்றம் போன்ற இயற்கை பேரழிவுகளில் இருந்து உலகத்தை காப்பாற்ற வேண்டும் என்று, இறைவனை வேண்டிக் கொள்வதே, இந்த யாகத்தின் நோக்கமாகும்.
யாகம் முடிந்த பின்னர், சுவாமிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது.



திருப்பதி ஏழுமலையானுக்கு மலர் யாகம்

திருப்பதி ஏழுமலையானுக்கு மலர் யாகம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நேற்று புஷ்ப யாகம் நடந்தது. அதையொட்டி, சுவாமிக்கு 8 டன் எடையுள்ள சாமந...

Post a Comment