அமெரிக்காவை அச்சறுத்தும் எபோலா வைரஸ்.
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் எபோலா வைரஸ் தாக்கம் அமெரிக்காவையும் தாக்க தொடங்கியுள்ளது.
இதன்படி எபோலா நோய்த் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அமெரிக்காவில் இனங்காணப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனை மூலம் எபோலா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் அந்த நபருக்கு எபோலா தொற்று ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அவர் டெக்ஸாஸிக்கு வந்ததாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எபோலா நோய் தொற்றுக்குள்ளனா நபர் டெக்ஸாஸ் ஹெல்த் பிரஸ்பைடேரியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அண்மையில் லைபீரியாவுக்கு சென்று வந்ததை அறிந்த மருத்துவர்கள் அவரைத் தனிமைப்படுத்தி மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். அதில், அவருக்கு எபோலா நோய் இருப்பது தெரியவந்தது என்று தெரிவித்தனர்.
ஏற்கெனவே எபோலா நோயால் பாதிக்கப்பட்ட பலர், சிகிச்சைக்காக விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். எனினும், அமெரிக்காவில் நடைபெற்ற பரிசோதனையில் ஒருவரிடம் எபோலா நோய் கண்டறியப்பட்டு இதுவே முதல் முறை.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் இந்த நோய், 6,574 பேரைத் தாக்கியுள்ளது எனவும், 3,091 பேர் இந்த நோயால் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை அச்சறுத்தும் எபோலா வைரஸ்
அமெரிக்காவை அச்சறுத்தும் எபோலா வைரஸ். மேற்கு ஆபிரிக்க நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் எபோலா வைரஸ் தாக்கம் அமெரிக்காவையும்...

Post a Comment