இது
இணைய யுகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்மில் பெரும்பாலானோர் இணைய
வசதியை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் கூட உலகில் இன்னும் இணைய
இணைப்பு இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பது தான்
நிதர்சனம். சமீபத்திய ஆய்வு படி இணைய இணைப்பு இலலமல் இருப்பவர்களின்
எண்ணிக்கை உலகில் 440 கோடியாக இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த எண்ணிக்கையில் 25 சதவீதம் இந்தியாவில் உள்ளவர்கள் என்பது இன்னும்
வேதனை அளிப்பதாகும்.
வைய விரிவு வலை என்று அறியப்படும் இணையம் நவீன
வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. எனினும் இணைய வசதி
கிடைபதில் உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகளும் இடைவெளியும் அதிகம்
இருக்கின்றன,. இதை பல ஆய்வுகள் உணர்த்தியுள்ள நிலையில் பிரபலமான மெக்கின்சி
நிறுவனம் நடத்தியுள்ள சமீபத்தில் ஆய்வில் , உலகில் இன்னும் இணைய வ்சதியை
அணுக முடியாமல் 440 கோடி பேர் இருப்பதாக தெரிவிக்கிறது.
120 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையின் முக்கிய
விவரங்களை அமெரிக்காவின் வாஷ்ங்டன் போஸ்ட் நாளிதழ்
வெளியிட்டுள்ளது.அதன்படி, இணைய வசதியை அணுக முடியாத நிலையில்
இருப்பவர்களில் 320 கோடி பேர் உலகின் 20 நாடுகளில் இருப்பதாகவும் இந்த
அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த அறிக்கை தகவல்படி இணைய வசதிக்கு வெளியே
உள்ளவர்களில் 25 சதவீதம் பேர் இந்தியாவில் இருக்கின்றனர். இந்திய மக்கள்
தொகையில் இணைய வசதியை அணுகமுடியாதவர்கள் 84.9 சதவீதம் . மியான்மரில் இது
99.5 சதவீதமாகவும், எத்தியோப்பியாவில் இது 97.8 சதவீதமாகவும்
தான்சானியாவில் 95.4 சதவீதமாகவும் இருக்கிறது.
சீனாவில் இணைய இணைப்பு இல்லாத வீட்கள் 730
மில்லியனாகும். பிரேசிலில் 100 மில்ல்லியனாகும். இணைய இணைப்புக்கு வெளியே
உள்ளவர்களி 64 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர்.
ஸ்மார்ட்போன்கள் மூலம் உலகம் உள்ளங்கையில் வந்துவிட்டதாக கருதப்படும்
நிலையில் இணைய பயன்பாட்டில் நிலவும் இந்த ஏற்றத்தாழ்வு கவலை அளிப்பதாக
வல்லுனர்கள் கருதுகின்றனர்.
இணைய இணைப்பு வசதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்
எனும் நோக்கில் கூகிள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் பல்வேறு
திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கூகிள் பலூன்கள் மூலம் இணைய இணைப்பு
இல்லாத இடஙக்ளில் இணைய வசதியை அளிக்க முற்பட்டு வருகிறது. இணைய வ்சதிக்கான
இண்டெர்நெட்.ஆர்க் முயற்சியில் பேஸ்புக் முக்கிய அங்கம் வகிக்கின்றது. இந்த
அமைப்பின் முதல் மாநாடு வரும் 9-10 தேதிகளில் தில்லியில் நடக்கிறது.
பேஸ்புக் இணைய வசதி அளிக்க ஆளில்லா விமானஙக்ளை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இணைய இணைப்பு பற்றிய அறிக்கை: http://www.mckinsey.com/client_service/high_tech/latest_thinking
வாஷிங்டன் போஸ்ட் செய்தி: http://www.washingtonpost.com/blogs/wonkblog/wp/2014/10/02/4-4-billion-people-around-the-world-still-dont-have-internet-heres-where-they-live/
சைபர்சிம்மன்
இணைய இணைப்பு இல்லாமல் 440 கோடி பேர்; ஆய்வில் தகவல்!
இ து இணைய யுகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்மில் பெரும்பாலானோர் இணைய வசதியை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் கூட உலகில் இன்னும்...

Post a Comment