உடலுறவிற்கு வற்புறுத்தி ராஜபக்ச போலிஸ் படையால் தெருத்தெருவாகத் தாக்கப்பட்ட பெண்: நிவேதா
ரத்தினபுரி இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தின் தலைநகர். மலையகத்தின் மலைகள் ஒருங்கி உறையும் அழகான பிரதேசம். இலங்கையில் ஏழை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் மாகாணங்களில் சப்ரகமுவ மாகாணாம் பிரதான் இடம் வகிக்கிறது. இரத்தினபுரியில் கடந்த வாரம் ஒரு போலிஸ் அதிகாரி அப்பாவிப் பெண் ஒருவரைத் பட்டப்பகலில் நடுத்தெருவில் எந்தக் கூச்சமும் இன்றி வயர்களால் தாக்கி தெருவில் இழுத்துச் சென்ற சம்பவம் பலரது உறங்கிக்கிடந்த உள்ளுணர்வைத் தட்டியெழுப்பியுள்ளது.
ராஜபக்ச தண்டிக்கப்படப் போகிறார் என்ற மேலோட்டமான மாயைக்குள்ளும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான அச்ச உணர்விற்குள்ளும் முடக்கப்பட்டிருந்த மக்களின் சிந்தனை சிறிய அளவிலாவது மாறியுள்ளது என்பதை இச் சம்பவம் தொடர்பான எதிர்வினைகள் உணர்த்துகின்றன.
ராஜபக்ச தண்டிக்கப்படப் போகிறார் என்ற மேலோட்டமான மாயைக்குளும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான அச்ச உணர்வாலும் அடைத்து வைக்கப்பட்ட சமூகம் இன்று தன்னை திரும்பிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறது என்பதற்கு இச்சம்பவங்கள் உதாரணங்களாகின்றன.
இன்று வரை புலிகளைக் காரணம்காட்டி ஆயுதப்படைகளின் அதிகாரத்தை வளர்த்துக்கொண்ட பேரினவாத அரசாங்கம் சிங்கள மக்களுக்கு எதிராக அதே அதிகாரத்தை இன்று கட்டவிழ்த்து விடுகின்றது.
நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துக்கொண்டிருக்க தெருவில் விழுந்துகிடந்த பெண்ணை போலிஸ் அதிகாரி தாக்கியதை சிலர் தொலைபேசிக் கமராவில் வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவு செய்தனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்துக்கொண்டிருக்க தெருவில் விழுந்துகிடந்த பெண்ணை போலிஸ் அதிகாரி தாக்கியதை சிலர் தொலைபேசிக் கமராவில் வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவு செய்தனர்.
34 வயதுடைய காந்தி என்ற ஏழைப் பெண்ணைத் தன்னுடன் பாலுறவு வைத்துக்கொள்ளுமாறு போலிஸ் அதிகாரி கேட்டுள்ளார். மூன்று தடவைகள் போலிஸ் சார்ஜன்ஸ் பாலுறவிற்காக வற்புறுத்தியிருக்கிறார். அதனை அப்பெண் நிராகரித்துள்ளார். அதன் காரணமாகவே அப்பெண் தெருத்தெருவாக போலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்டுள்ளார்.
உடலுறவிற்கு வற்புறுத்தி ராஜபக்ச போலிஸ் படையால் தெருத்தெருவாகத் தாக்கப்பட்ட பெண்: நிவேதா
உடலுறவிற்கு வற்புறுத்தி ராஜபக்ச போலிஸ் படையால் தெருத்தெருவாகத் தாக்கப்பட்ட பெண்: நிவேதா ரத்தினபுரி இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தின் தலைநக...

Post a Comment