ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழாவில் குற்றம் கடிதல்
குழந்தைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகியுள்ள புதிய படம் ‘குற்றம் கடிதல்’. குழந்தைகளை குற்றவாளிகளாக அறிவித்து அவர்களின் வாழ்க்கையை நசுக்கிற கொடுமையை சொல்லும் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அஜய், பிரசித்ரா, சாய் ஆகிய குழந்தைகள் நடித்துள்ளனர். ஜி.பிரம்மா என்பவர் இயக்கியிருக்கிறார். எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சங்கர் ரங்கராஜன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படம் வருகிற அக்டோபர் 4-ந் தேதி முதல் 11-ஆம் தேதி வரை ஜிம்பாப்வேயில் நடைபெறவிருக்கும் 14-வது ஜிம்பாப்வே சர்வதேச திரைப்படவிழாவில் கலந்துகொள்ள தேர்வாகியிருக்கிறது. அதுமட்டுமின்றி, மும்பையில் அக்டோபர் 14-ந் தேதி முதல் 21-ம் தேதி வரை நடக்கவுள்ள 16-வது திரைப்பட விழாவிலும் இந்திய திரையரங்கில் புதிய முகங்கள் என்ற தகுதியின் கீழ் திரையிடப்பட உள்ளது.
தமிழ் படங்களில் ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘ஆரண்யா காண்டம்’ ஆகிய படங்களுக்கு பிறகு ‘குற்றம் கடிதல்’ படம்தான் மும்பை படவிழாவில் திரையிடப்பட உள்ளது.
இந்த மாதிரியான திரைப்பட விழாக்களில் கிடைக்கும் அங்கீகாரம், ஒரு திரைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் படத்தை பற்றிய ஒரு வலுவான கருத்து உருவாக பெரிதளவு உதவுகிறது, விளம்பரங்கள் மிக மிக அவசியம் என கருதப்படும் இந்த காலகட்டத்தில் இது பெருமளவுக்கு உதவும் என படத்தின் தயாரிப்பாளரான ஜே.எஸ்.கே.சதீஷ் கூறுகிறார்.
மேலும் அவர் கூறும்போது, திறமையான இளைஞர்களின் சங்கமமாக இருக்கும் 'குற்றம் கடிதல்' படக்குழுவினருக்கு திரை உலகில் பெரும் வரவேற்பு இருக்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன். முற்றிலும் புதியவர்கள் நடிக்கும் இந்த படம் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெயர் ஈட்டி தரும் என்பதில் ஐயமில்லை என்று கூறினார்.
ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழாவில் குற்றம் கடிதல்
ஜிம்பாப்வே சர்வதேச திரைப்பட விழாவில் குற்றம் கடிதல் குழந்தைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகியுள்ள புதிய படம் ‘குற்றம் கடிதல்’. குழந...

Post a Comment