கற்பனை செய்ய முடியாத கணக்கு அது! குன்ஹா தீர்ப்பு முழு விவரம்
பெங்களூரு: ஜெயலலிதா தங்கள் மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் தேவையற்ற பிரச்னைகளை கர்நாடக அரசு சந்தித்து வருவதாகவும், இதனால் ஜெயலலிதா தமிழக சிறைக்கு மாற்றப்பட்டால் நன்றாக இருக்கும் என்றும் அம்மாநில அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் சிறையில் அடைக்கப்பட்ட சிறைச்சாலை வளாகத்திலும், சிறைச்சாலையைச் சுற்றிலும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் தினமும் குவிந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இருப்பினும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதால், ரிசர்வ் போலீஸ் படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் அதிமுகவினர், காவிரி பிரச்னை காரணமாகத்தான் காழ்ப்புணர்ச்சியில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதா தங்கள் மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் தேவையற்ற பிரச்னைகளை கர்நாடக அரசு சந்தித்து வருவதாகவும், இதனால் ஜெயலலிதா தமிழக சிறைக்கு மாற்றப்பட்டால் நன்றாக இருக்கும் என்றும் கர்நாடக மாநில அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “இது மிகவும் உணர்ச்சிகரமான விவகாரம். சென்ற வாரம் தமிழக வழக்குரைஞர்கள், அதிமுக தொண்டர்கள் பல இடங்களில் கர்நாடக அரசுக்கு எதிராக இங்கே பல போராட்டங்களை நடத்தினர். ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணையில் தாமதம் ஏற்படுத்துவதாக எங்கள் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அவருக்கு 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப் பட்டதில் இருந்து நாங்கள் தேவையற்ற பிரச்னைகளை இதுவரை சந்திக்காத வகையில் இப்போது சந்தித்து வருகிறோம். எங்கள் மாநிலத்தில் இது போன்ற பிரச்னை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஜெயலலிதா தமிழக சிறைக்கு மாற்றப்பட்டால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
உடல் நலக் குறைவு காரணமாக அவருக்கு சிறை நிர்வாகம் மருத்துவ வசதிகளை அளித்து வருகிறது. ஜெயலலிதா விருப்பப் படி, முதலில் ஓரிரு நாட்கள் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை வழங்கியபோதும், சிறை நிர்வாக விதிகளைக் காரணம் காட்டி அது மறுக்கப்பட்டுள்ளது. இதுவும் கர்நாடக அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சிறை நிர்வாகத்தின் செயல்கள் தங்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறும் அந்த அமைச்சர், "ஜெயலலிதாவுக்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு வழங்குவதற்கு விமர்சனம் எழுவதால், அதற்காக நாங்கள் அவருக்கு சிறை உணவையே வழங்க வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறினால், அதனால் எழும் அரசியல் ரீதியான நெருக்கடியை நாங்கள் சந்தித்தாக வேண்டும்.
ஏற்கெனவே காவிரி நதி நீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கர்நாடக அரசின் மீது அதிருப்தியில் உள்ளது தமிழகம். இந்நிலையில் மேலும் இரு மாநிலங்களுக்கு இடையில் பிரச்னைகள் புதிதாக உருவாவதை கர்நாடகம் விரும்பவில்லை.” என்று கூறியுள்ளார்.
இதனிடையே வரும் 7 ஆம் தேதி ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. விசாரணையில் மேலும் நீடித்தாலோ அல்லது வேறு ஏதாவது காரணங்களுக்காக ஜாமீன் மறுக்கப்பட்டாலோ, மீண்டும் பிரச்னைகள் ஏற்படலாம் என கர்நாடக அரசு கருதுகிறது. இதன் காரணமாக மத்திய அரசை தலையிட்டு ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வோம் என கர்நாடக அரசு வட்டாரங்கள் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது
இந்நிலையில் அதிமுகவினரை அமைதி காக்குமாறும், வன்முறையைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, தாங்கள் நீதிமன்றத்தின் உத்தரவை மட்டுமே பின்பற்றுவதாகவும் கூறியுள்ளார்.
கற்பனை செய்ய முடியாத கணக்கு அது! குன்ஹா தீர்ப்பு முழு விவரம்
கற்பனை செய்ய முடியாத கணக்கு அது! குன்ஹா தீர்ப்பு முழு விவரம் பெங்களூரு: ஜெயலலிதா தங்கள் மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் தேவையற்ற பிரச...
Post a Comment